பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

உலக வரலாற்றில்



அந்த நல்லாட்சி, ரஷ்யாவில் லெனினுக்குப் பிறகு, அஞ்சா நெஞ்சன் ஸ்டாலின் தலைமையில் உலகம் வியக்க நடந்து வந்தது. அந்த ஆட்சியின் செயல்முறைத் திட்டங்களைத் தவறு என்று சொன்ன எவரும் அப்போது உயிர் பிழைத்தது இல்லை.

ஆனால், மார்ஷல் டிட்டோ என்ற யூகோஸ்லேவிய நாட்டு மாவீரன் ஸ்டாலினை மூர்க்கத் தனமாக எதிர்த்தது மட்டுமல்ல; அவர் தப்பி உயிர் மீண்டது மட்டுமன்று; தனியே ஒரு சோஷலிச ஆட்சியையும் பல இடர்ப்பாடுகளுக்கு இடையில் அமைத்து நடத்திக்காட்டிக் கம்பீரமாக நிமிர்ந்து நின்று வெற்றி பெற்றவர் அந்த மாவீரன் மார்ஷல் டிட்டோ என்ற ஒருவர்தான் என்று உலக நாடுகளின் விடுதலை வரலாறு இன்றும் அவரைப் போற்றுகின்றது.

இந்த உண்மையை, புரட்சியில் ஒரு புரட்சியைப் புதுமையாக நடத்திக்காட்டிய செயலை ஏன், உலகத்தையே உலுக்கிக்காட்டிய சோவியத்ரஷ்ய நாட்டையே ஒரு கலக்கு கலக்கிப் புரட்சி செய்து காட்டியவர் இந்த மார்ஷல் டிட்டோ.

இத்தகைய ஒர் அற்புத ராஜதந்திரம் படைத்த சோசலிசச் சிற்பியான மார்ஷல் டிட்டோ, கி.பி.1892-ம் ஆண்டு மே மாதம், 15-ம் நாளன்று ஒரு விவசாயினுடைய மகனாகப் பிறந்தவர் ஆவார். அவருடன் பிறந்த உடன் பிறப்புக்கள் மொத்தம் பதினைந்து பேர்கள். அவர்களுள் இவர் ஏழாவது மகனாவார்.