பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

119



மார்ஷல் டிட்டோவின் குடும்பம் செல்வச் சீமான்களது குடும்பம் அல்ல; வறுமை ஒன்றே வாழ்வாகக் கொண்ட மிக மிக ஏழைக் குடும்பமாகும். உண்பதற்குக் கூடஒருவேளை உணவும் அற்ற கூலிக் குடியானவர் குடும்பம். இப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலே தோன்றிய டிட்டோ எந்த வறுமைச் சூழலைப் பற்றியும் கவலைப்படாமல் வளர்ந்துவந்தார். ஏதோ பெயரளவுக்கு கல்வியை ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்திலே படித்து வந்தார்.

அவ்வளவுதான் அவரது கல்வித் தகுதி. அப்படிப்பட்ட குடும்பத்திலே இருந்து வெளியேறி தனியாகவே அவர் அலைந்து திரிந்து வாழ்க்கை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

டிட்டோ தனது சிறு பிராயத்தில் செய்யாத வேலைகளே இல்லை. ஆடுமாடுகளை மேய்த்தார்; உணவு விடுதிகளிலே வேலை கேட்டு எச்சில் தட்டுக்களைக் கழுவி வயிறு வளர்த்தார். பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று கூலிக்காக அந்தப் பத்திரிகைகளை வீதிவீதியாகச் சென்று கூவிக் கூவி விற்று, அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு ஒருவேளை உணவு உண்டுகாலம் தள்ளிவந்தார். இறுதியாக ஒரு இரும்புப் பூட்டுக் கடைக்குச் சென்று, அந்த தொழிலில் ஈடுபட்டுப் பூட்டுக்களை வீடு வீடாகச் சென்று விற்றுக் கூலிபெற்று வாழ்ந்தார். இது தான் மார்ஷல் டிட்டோவின் இளமைக்கால கோரவரலாறு.