பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

121



தான் பிறந்த நாடான யூகோஸ்லேவியாவில் பிழைக்க முடியாது என்பதைத் திட்ட வட்டமாகப் புரிந்து கொண்ட டிட்டோ, ஐரோப்பிய நாடுகளுக்கு ஓடினார்.

ஓடிய ஒவ்வொரு நாட்டிலும் கூட, அவர் பிழைப்பதற்கு அப்படி ஒன்றும் ஒரு பெரிய வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால், அந்தந்த நாட்டினுடைய அரசியல் கருத்துக்களும், சமுதாயச் சிந்தனைத் தெளிவுகளும் அவருக்குப் புரியும் ஒருவாய்ப்பு கிட்டியது.

அப்போது முதல் உலகப்போர் துவங்கியது. அந்தந்த நாடுகள் இடையே ராணுவ பலத்தைப் பெருக்கும் பரபரப்புக்கள் ஏற்பட்டன. உடனே டிட்டோ மீண்டும் தனது தாய் நாடான யூகோஸ்லேவியாவுக்கு ஓடிவந்தார்.

தாய் நாடு திரும்பிய டிட்டோ ராணுவத்தில் சேர்ந்தார். போர் முனைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டதால் அவர் படையிலே சேர்ந்து போரிடத் தயாரானார்.

யூகோஸ்லேவியா நாடு அப்போது ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகளின் ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது. அந்த நாடு ரஷ்யாவுடன்போர் புரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் டிட்டோ கட்டாயப் படுத்தப்பட்டு ராணுவப் போர்வீரனாக களம் நோக்கிச்செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டதால் போர்முனை சென்றார்.