பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

உலக வரலாற்றில்



போர் முனையில் ரஷ்ய மன்னனான ஜார் படையுடன் யூகோஸ்லேவியாப் படைகள் மோதும்போது, டிட்டோ படுகாயமடைந்ததும், அவர் கைது செய்யப்பட்டார். அதனால் டிட்டோ ரஷ்ய நாட்டிலுள்ள சைபீரியா சிறையிலே அடைக்கப்பட்டார்.

சிறையிலே இருந்த வேதனைகளுக்கு இடையிலே, உலக நாடுகளின் வரலாறுகளையும், அந்தந்த நாட்டு அரசியல் நெருக்கடிகளின் எழுச்சிகளையும், புரட்சிகளையும் உணர்ச்சியோடு படித்து அந்த வரலாற்று வீரர்களைப் போல உருவானார்!

எவருக்கும், எதற்கும் அஞ்சாத மனநிலையும், நேர்கொண்ட போக்கும், சிந்தனைகளின் தெளிவும், முற்போக்குச் செயல் முறைகளும் அவருக்கு ஏற்பட்டன. குறிப்பாக, ரஷ்ய நாட்டின் பேரறிஞர் என்று அப்போது மக்களால் போற்றப்பட்டு வந்த லியோ டால்ஸ்டாயின் நூல்களை ஆழ்ந்து கற்றார்.

மார்ஷல் டிட்டோ ஒரு கம்யூனிஸ்ட் சிந்தனையாளன் என்ற கருத்து எப்படியோ ஜார் மன்னன் ஆட்சிக்குத் தெரிந்துவிட்டது. அதனால் அவரைக் கொலை செய்து விடவேண்டும் என்று ஜார் மன்னனது சிறை அதிகாரிகள் சதிசெய்தார்கள்.