பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

123



இந்த அரசியல் கொலைச் சதி டிட்டோவுக்குப் புரிந்துவிட்டது. உடனே அவர் தனக்குள்ள மன பலத்தால் சிறையிலே இருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரஷ்யாவில் கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சி வெற்றி பெற்றது. அங்கே பொதுவுடைமை அரசு உருவானது. ஆனாலும் டிட்டோ, ரஷ்யாவிலே இருந்து யூகோஸ்லேவியாவுக்கு தப்பி ஓடிவந்து சேர்ந்தார். அதுமுதல் அவர் ரஷ்யக் கம்யூனிஸ்ட் ஆட்சியின் முக்கியஸ்தர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

ரஷ்யாவிலே நடந்துவந்த பொதுவுடைமை ஆட்சியை வீழ்த்திட, அந்த நாட்டின் துரோகக் கும்பல்களும், ஜார் மன்னன் படையினரும் முயன்ற நேரத்தில், யூகோஸ்லேவியாவில் இருந்த டிட்டோ, தன்னுடைய ராணுவ நண்பர்களுடன் ரஷ்யா சென்று ஜார் படைகளையும், துரோகக் கும்பலையும் எதிர்த்துப் போர் செய்து, பொதுவுடைமை ஆட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வெற்றியும் பெற்றார்.

இரஷ்யாவில் பொதுவுடைமை ஆட்சி டிட்டோவின் உள்ளத்தில் ஒரு புதுவித அரசியல் புத்துணர்ச்சியைப் புகுத்தியது.அதனால், தனது தாய் நாடான யூகோவிலும் ஒரு ரஷ்யப் புரட்சியை நடத்தத் திட்டமிட்டார்.