பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

125



திரும்பிவந்த டிட்டோ, தனது நண்பர்களுடன் தொண்டர்களைத் திரட்டி புரட்சி நடந்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அப்போது இரண்டாவது உலகப்போர் துவங்கிவிட்டது. இட்லர் யூகோஸ்லேவியாவைப் பிடித்துக் கொண்டார்.

டிட்டோ தனது தாய் நாட்டை எப்படியாவது இட்லரிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்று திட்டமிட்டார். லட்சம் வீரர்களுக்கு மேல் படை திரட்டி ராணுவப் பயிற்சியைக் கொடுத்தார். ரகசியமாக ராணுவம் தயாரானது. அந்த வீரர்களை மலைக் குகைகளிலே மறைத்து வைத்து, திடீர் திடீரென்று தோன்றி இட்லர் படைகளுடன் போரிட்டுக் கடும் சேதத்தை விளைவித்தார்.

டிட்டோவின் இந்த எதிர்பாராத தாக்குதல்களை இட்லர் படைகளால் சமாளிக்க முடியவில்லை. 1944-ஆம் ஆண்டில் மாவீரன் இட்லரது படைகள் தோற்றுப் பின்வாங்கி ஓடின. அதனால், டிட்டோ தனது தாய்நாட்டை மீட்டு அந்தநாட்டிற்கு அவரே தலைவரானார்.

தலைவராகிவிட்டதோடு நில்லாமல், டிட்டோ யூகோஸ்லேவியாவை ஒரு குடியரசு நாடு என்று பிரகடனப்படுத்தினார்.