பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உலக வரலாற்றில்
விடுதலை வீரர்கள்

வங்கம் தந்த விடுதலைச் சிங்கம்

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடியதற்கு ஏற்ப உலகத்துக்கு ஒரு புதுமையாக அகிம்சை வழியிலே அறப்போர் நடத்தி இந்திய நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தார் மகாத்மா காந்தியடிகள்.


அந்த காந்தீய நெறியைப் பின்பற்றி உலகத்திலே பலர் அகிம்சை வழியிலே சமுதாய விடுதலையும் பெற்றுத் தந்துள்ளார்கள். குறிப்பாக அமெரிக்காகாந்தி மார்டீன் லூதர் கிங், அயர்லாந்து காந்தி டிவேலர்லரா போன்ற பலர் காந்திய வழியைப் பின்பற்றினார்கள்.