பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயன்

121

வேண்டும். பின்புதான் அருளினால் பயன் உண்டாகும். வயிற்றுவலிக்காரனுக்குச் சோற்றைக் கொடுத்தால் பயன் இல்லை. முதலில் வயிற்று வலியைத் தீர்த்துப் பின்பே உணவை அளிக்க வேண்டும். அச்சம் உடையவனுக்கு அரிய பொருள் கிடைத்தால் அதன் பெருமை தெரியாமல் உதறித் தள்ளிவிடுவான். அது குறித்தே முதலில் நாம் காண வலக்கையினால் அஞ்சேல் என்பதைக் காட்டுகிறான் இறைவன். வலக்கைதானே சிறந்த கை? அந்தக் கையை முதலில் பார்க்க வேண்டும். அதைப் பார்த்து அவனை அணுகினால் நம்முடைய அச்சத்தை அவன் முதலில் போக்கிவிட்டுப் பின்பு நாம் இன்பம் அடைகிற இடம் இங்கே இருக்கிறது என்பதைக் காட்டுவான். ஆண்டவனுடைய இடக்கை அவன் திருவடியைச் சுட்டிக் காட்டி, அதை அடைந்தவருக்கு அருள் செய்யும். அருள் செய்வது இடத்திருக்கரம். இடத்திருக்கரத்துக்கு முன்பே துன்பத்தினை நீக்கி முதலில் பயன் தருவது அபயம் காட்டும் திருக்கரம்.

இந்தப் பாட்டு நமக்கு அபயம் அளிக்கிறது. அஞ்சாமையைத் தருகிற கந்தப்பெருமானுக்குரிய அலங்காரமாகிய இந்த நூலைப் படிக்கிறவர்கள் அபயத்தைப் பெறுவார்கள். அதற்கு அடுத்தபடி அவர்களுக்கு வரதமும் கிடைக்கும். என்பதைக் குறிப்பால் பெறலாம்.

உண்மை நிகழ்ச்சி

ங்கே என்னுடைய சொந்த அநுபவம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்தப் பாட்டின் கடைசியில் உள்ள,

கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும்

என்பதற்கு விளக்கமாக அந்த நிகழ்ச்சி அமையும் என்று நினைக்கிறேன்.