பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

உள்ளம் குளிர்ந்தது

கண்டுபிடித்துக் கொள்கிறான். உண்ணுவது முயற்சியினாலே வருவது; உறங்குவது தானே வந்துவிடுகிறது. இறைவனைத் துதிப்பதற்கும், தியானம் செய்வதற்கும் ஒருவனுக்கு உண்மையான சிரத்தை இருந்தால் எந்த நிலையிலும் உணவைப் போகிற இடத்தில் பெற்று உண்ணுவது போல அவற்றைச் செய்துவிடுவான். அப்படிச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம் மற்றப் பொருள்களில் வைத்த பற்றுத்தான்.

பற்று வைத்தவன் சிறிதே உணர்வு வந்தபோது எந்தப் பக்கம் வந்தாலும் அவன் வெளியே வர முடியாத படி அந்தப் பற்று அவனுக்குத் தடையாக இருப்பதைக் காண்கிறான். இடப்பக்கம் போனால் மனைவி வந்து நிற்கிறாள். வலப்பக்கம் போனால் மக்கள் வந்து நிற்கிறார்கள். இவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்வதையே கடமையாகத் தீர்மானித்துக் கொண்டிருக்கிறான். அதனால் இறைவனைத் தியானிக்கும் கடமையைச் சற்றே தள்ளி வைக்கப் பார்க்கிறான். இப்படியேதான் பொழுது போய்க் கொண்டிருக்கிறது. துணிவு இல்லாமல், பற்றின பற்றை நழுவ விடுவதற்குரிய தைரியம் இல்லாமல், எந்த நிமிஷத்திலும் தனியாக வந்து அமர்ந்து கொள்வதற்குரிய பழக்கம் இல்லாமல் திண்டாடுகிறான்.

இருதலைக் கொள்ளி எறும்பு

தற்கு எதையாவது உவமை சொல்லலாமே! இருதலைக் கொள்ளிக்கு இடையில் அகப்பட்ட எறும்பு திண்டாடுவது போல நாம் திண்டாடுகிறோம். இருதலைக் கொள்ளி எறும்பு போல என்பது ஒரு பழமொழி. இரண்டு பக்கமும் தீ எரிந்து கொண்டிருக்கும் கொள்ளியினிடையே அகப்பட்ட எறும்பு எந்தப் பக்கமும் போகமுடியாது. கீழே குதித்து விடலாம். ஆனால் ஒரு