பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி 85 அதனால் தங்கள் குறைகளைத் தீர்த்துக்கொள்ள முயன்றனர். இந்த முறை நெடுநாட்களுக்குப் பயன் தரவில்லை. சிலருடைய தயாள குணத்தினால், ஒரு பெரிய கூட்டத்தில் வளர்ந்து வரும் தொல்லைகளைப் போக்கிவிட முடியாது. இதனால் தொழிலாளர்களின் வாழ்க்கையிலே யும், குறிப்பிடத்தக்க வளம் உண்டாகவில்லை. வறுமைத்தேள் கொட்டலாயிற்று. அப்போது தொழில் முறை மாறி பண்ட உற்பத்தி அதிகரித்தது. செல்வம் கொழித்ததால் வாழ்க்கை வசதிகள் அதிகமாகி நாகரிகம் மேலோங்கி விட்டது. நாகரிகத்தின் முழுப்பயனை ஒரு சிலர் அடைய, அந்த நாகரிகத்தின் அடிப்படைக்கு அரணாக அமைந்திருந்த பெரும்பாலானவர்கள், அந்த நாகரிகத்தின் பயனை அனுபவிக்காமலிருந்த போது அவர்கள் மனதிலே ஓர் அதிர்ச்சி-ஒரு குமுறல் ஏற்பட்டது. தங்கள் நிலை மோசமாகிற நேரத்திலே, தங்கள் உழைப்பின் விளைவாக ஏற்பட்ட வாழ்க்கை வசதிகளில் துளியும் தங்களுக்குக் கிடைக்காதது, அவர்கள் மனதிலே ஓர் அணைக்க முடியாத தீயை உண்டாக்கிற்று. சேகரித்த தேனை இழந்துவிடும் வண்டுகளாகத் தமது வாழ்க்கை இருப்பதை அறிந்தனர். குறைபாடுகளைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசினர். ஒவ்வொரு நாளும் பேசினர்; கூடிக்கூடிப் பேசினர். என்னதான் இதற்குப் பரிகாரம்? பொறுத்திருந்து பார்ப்போம். இளகாமலா போகும்? அவர் மனம் ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டும். அவர் நம்மைக் கைவிடமாட்டார். என்று துவக்கப்பட்ட உரையாடல், கொஞ்ச காலத்தில், எத்தனை முறை கேட்பது? எவ்வளவு கெஞ்சிக் கேட்பது?