பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 அறிஞர் அண்ணா என் பாடல் குப்பை கூளம் பற்றி குப்பன் சுப்பன் குறித்து என்று அறிவிக்கிறார். இவர்களைப் பற்றிய கவிதையிவே கவர்ச்சி இருக்காதே, மெருகு இருக்காதே என்று கேட்பவர் உளர் என்பது தெரியுமல்லவா இந்தப் புதுமைக் கவிஞனுக்கு? முதலாளி 30. அறிவை வழங்கியது அண்ணாவின் எ எழுதுகோல்! அண்ணா முதலாளி எப்படி உற்பத்தியாகிறான்? எதனால் ஒருவன் முதலாளியாகிறான்?' ww இதற்குச் சுருக்கமான பதில், 'தனிப்பட்ட மனிதன் இலாபத்தால் முதலாளியாகிறான்' என்பது தான்! இன்னும் கொஞ்சம் விளக்கமாக. மார்க்ஸ் கூறுகிறபடி பார்த்தால் தொழிலாளிகளின் உழைப்பை முதலாளி திருடிக் கொள்கிறான்; ஆகவே அவன் முதலாளியாகிறான்! அனைத்தையும் வாழ்க்கைத் தேவைகள் அனைவராலும் பூர்த்தி செய்துகொள்ள முடிவதில்லை; இல்லாமை அல்ல இதற்குக் காரணம்; செல்வத்தைப் பெருக்கிடும் சாதனம் சிலரிடமே சிக்கிவிட்டதால் ஏற்பட்ட சீரழிவுதான் பாட்டாளி பொதுநலம் பாட்டாளி ஆட்சியிலேதான். மலர முடியும்! அந்த ஆட்சியின் வெற்றியினால் மட்டுமே உழைப்பு ஊரழிக்கும் காரியமாகாது தடுக்கவும், விஞ்ஞானம் விபரீதத்தைப் பொழியாது நன்மை பயக்கக் கூடியதாக அமையவும் வழி பிறக்கும்!