பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/12

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வாழ்த்துரை செஞ்சி ந. இராமச்சந்திரன், பி.ஏ.,பி.எல்., துணைப் பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தீர்மானக்குழுச் செயலாளர், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் இணைப் பொதுச் செயலாளர், தொழிற்சங்கத் தலைவர் 'கண்ணியம்' ஆசிரியர் திரு. குலோத்துங்கன் அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளர், கொள்கைவாதி, நேர்மையானவர், கடின உழைப்பாளி. அவர் மிகச் சிறப்பாக, தொழிலாளர்களின் உரிமைகள் குறித்துத் திறம்பட வாதாடி, செயல்பட்டு, தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர். நீண்ட கால திராவிட இயக்க உணர்வோடு செயல்பட்டு வந்த காரணத்தால் அண்ணாவின் தொழிற்சங்க நடவடிக்கைகளை அவர் பேச்சில் கூர்ந்து கவனித்து, அண்ணா அவர்கள் தொழிற்சங்கத் தொழிலாளர்க்கும், பொதுமக்களுக்கும் என்னென்ன விதத்தில் தன்னுடைய சொற்பொழிவுகளின் மூலமாகக் கருத்துக்களை வழங்கினார் என்பதை ஒரு புத்தகமாக வெளியிட்டு அதைத் தொழிலார்க்கு ஒரு கருவூலமாக வழங்கி வந்திருக்கிறார். அண்ணா ஒரு சமுதாய சீர்திருத்தவாதியாக, திராவிட இன எழுச்சிப் போராளியாக, மூடநம்பிக்கையை எதிர்க்கின்ற சமுதாய சீர்திருத்தவாதியாக, ஒட்டுமொத்த மக்களுக்கும் தொண்டாற்றுகின்ற மிகச் சிறந்த சமூக நலத் தொண்டராக, தொழிற்சங்கவாதியாகத் தன்னை