பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்துரை

தத்துவக் கவிஞர் குடியரசு

துணைப் பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.


ஏழைக்கு எத்தனையோ
பெயர்கள் உண்டு:
இழிஅடிமை, தொழிலாளி,
கூலிக்காரன்,
தாழ்குலத்தோன், தீண்டாதோன்,
ஒதுக்கப் பட்டோன்,
சேரிமக்கள். என்றழைக்கப்
படுவோர் ஏழை!
கோழைக்குப் பிறந்தவர்போல்
தென்பட் டார்கள்;
குப்பத்தில் குப்பையாகக்
கிடக்கும் கூட்டம்;
வாழவழி அற்றவரை
வாழ வைக்க,
வரலாற்றைப் புதுப்பித்தார்
அறிஞர் அண்ணா!
பொதுவாழ்வைத் தொழிலாளர்
வாழ்வுக் காக