இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xiii
புதுப்பார்வை வீசத்தான்
பழக்கி னார்கள்.
பொதுவுடைமை சித்தாந்த
வெப்பம் வீச,
புயல்வீச, அறிஞரண்ணா
தூண்டி னார்கள்.
எதுவாழ்வு என்பதற்கு -
எழுத்தைப், பேச்சை
இயக்கி னார்கள்; இளவட்டத்
திற்குள் தீயை,
மெதுவாகக் குடியேறக்
கொளுத்தி னார்கள்.
மேல்தட்டைக் கீழ்த்தட்டாய்
ஆக்கி னார்கள்.
இத்தொகுப்பு அண்ணாவின்
உரைவீச் சாகும்;
இனவெழுச்சி ஏழைவீசும்
வான்வீச் சாகும்;
கத்துகடல் முழக்க மாகும்.
எரிம லைக்குள்
கனன்றிருக்கும் எதிர்புரட்சி
விதிர்ப்பே யாகும்;
மொத்தமாகச் சொல்வதானால்
இந்நூற் றாண்டின்,