பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்த்துக்கள்

வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

செய்தித் தொடர்பாளர், மறுமலர்ச்சி தி.மு.க. உறுப்பினர், திரைப்படத் தணிக்கைக் குழு.

உழைப்பாளி,தொழிலாளி, பாட்டாளி' என்னும் நூலினை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தீர்மானக்குழுச் செயலாளராக கழகப் பணியாற்றிவரும் திரு. ஆ.கோ. குலோத்துங்கன் அவர்கள் வெளியிடுவதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.

நீண்ட நெடுங்காலமாக திராவிட இயக்கத்தோடு தொடர்புகொண்டு தொழிலாளர்களின் நலனுக்காகப் போராடி வருகின்ற அவருடைய முயற்சிக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள்.

உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் உரிமைக்காகக் குரல் கொடுத்த பேரறிஞர் அண்ணாவின் கருத்துக்களைத் தொகுத்து வெளிவரும் இந்நூல் தமிழ்கூறும் நல்லுலகுக்கு ஒரு சிறந்த வரவாகும்.