பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்த்துச் செய்தி

பேராசிரியர் க.ந. இராமச்சந்திரன், எம்.ஏ,

தலைமைக் கழகச் செயலாளர்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம்

பேரன்புசால் நண்பர் திரு.ஆ.கோ. குலோத்துங்கன் உழைப்பாளி, தொழிலாளி, பாட்டாளி, என்ற நூலின் தொகுப்பு ஆசிரியர். அவரே கடுமையாக உழைக்கும் உழைப்பாளி; பாட்டாளியின் பாதுகாவலராக விளங்கிய தொழிற்சங்கத் தலைவர்.

நேர்மைக்குப் பெருமைகூட்டும் புகழாளி! அவருக்கு எழுத்தாற்றல் என்பது என்றும் கைவந்த கலை. ஆற்றொழுக்காக நிரல்பட நிகழ்ச்சிகளைப் கோர்த்துச் சொல்லுவதில் வல்லவர். தொழிலாளர்களுக்காகத் தன்னை மெழுகுவத்தியாக அழித்துக் கொண்டவர்.

நெஞ்சுரத்தில் அவருக்கு நிகராகப் பிறிதொருவரை எடுத்துக்காட்டமுடியாத உறுதி மிக்கவர். மற்றவர்க் குழைப்பதில் மலரினும் மெல்லிய இதயம் பெற்றவர். அவரின் ஆற்றல் மிகு எழுத்தால் இன்னும் பலநூல்கள் வெளிவர விரும்பி வாழ்த்துகிறேன்.