நல்வாழ்த்துக்கள்
சு. துரைசாமி
பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி தொழிலாளர்
முன்னணி.
நண்பர் டாக்டர் குலோத்துங்கன் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் பல்வேறு நேரங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து, இந்த நூலை வெளியிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், தொழிலாளர்கள் மீது கொண்டிருந்த நாட்டத்தை இவை தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
அண்ணா அவர்கள் குறுகிய காலமே ஆட்சிப் பொறுப்பிலிருந்தாலும் செயற்கரிய பல்வேறு காரியங்களைச் செய்து, நாட்டின் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்து நிற்கின்றார்.
மூடப்பட்ட பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு அரசு நிதியிலிருந்து, இந்தியாவிலேயே முதன் முறையாக நிவாரணம் வழங்கிய பெருமையும் அவரைச் சாரும்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தொழிலாளர்கள் மீது கொண்டிருந்த அன்புக்கு இவையெல்லாம் எடுத்துக் காட்டுக்களாகும்.
டாக்டர் குலோத்துங்கன் அவர்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
2.2.