பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3


வாழ்த்துரை வழங்கிய மறுமலர்ச்சி தி. முக. வின் அவைத் தலைவர் அண்ணன் எல்.ஜி. அவர்களுக்கும், கொங்குநாட்டுத் தங்கம் பொருளாளர் அண்ணன் மு. கண்ணப்பன் அவர்களுக்கும், துணைப் பொதுச் செயலாளர்கள் தரைப்படைத் தளபதி அண்ணா செஞ்சியார் அவர்களுக்கும், தத்துவக் கவிஞர் அண்ணன் குடியரசு அவர்களுக்கும், செய்தித் தொடர்பாளர் சகோதரர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், தலைமைக்கழகச் செயலாளர் பேராசிரியர் அண்ணன் கே.என்.ஆர் அவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

இந்நூலை வெளியிடவேண்டும் என்றதுமே பாசத்தோடு, 'குலோத்துங்கனுக்காக உடனே செய்ய வேண்டியது தானே! என்று, நிறுவன மேலாளர் குருமூர்த்தி அவர்களிடம் மகிழ்ச்சியுடன் கூறிய, செட்டிநாடு தந்த தமிழ்முத்து, மொழி ஞாயிறு, பதிப்பகச் செம்மல் பேராசிரியர் மெய்யப்பன் அவர்களுக்கும் மணிவாசகர் பதிப்பகத்திற்கும் என் நன்றி என்றும் உரியது.

சென்னை, 20-7-1999. அன்பான

ஆ.கோ. குலோத்துங்கன்.