இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கண்ணியம் விருதுகள் . 5 1965-ல் சுதேசமித்திரன் மாணவர் மலரில் இலட்சியமும் வாழ்க்கையும் என்ற கட்டுரையை இவர் படத்துடன் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. பள்ளியில் படிக்கும்போதே பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டிகளில் வெற்றி பெற்றுப் பல பரிசுகளும் பெற்றுள்ளார். நம்நாடு, முரசொலி, தனிஅரசு, மாலைமணி, இனமுழக்கம், கழகக்குரல், உழைப்பாளி, சங்கொலி போன்ற பல ஏடுகளில் கதை, கட்டுரை எழுதியுள்ளார். • 'கண்ணியம்' என்ற இலக்கிய இதழைப் பத்து ஆண்டுகளாக ஆசிரியராக இருந்து நடத்தி வருகிறார். மறைந்த தொழிற்சங்கத் தலைவர் திரு. காட்டூர் கோபால் நடத்திய 'உழைப்பாளி' இதழில் எண்ணங்களை வெளியிட்டார். பாவேந்தர் பட்டயம் ; காஞ்சியில் பாவேந்தர் மகன் மன்னர்மன்னன் சார்பாக வழங்கப்பட்டது. எழுத்தாளர் திலகம் : பேராசிரியர் முனைவர் அய்க்கண் "எழுத்தாளர் திலகம்" என்ற பட்டத்தை வழங்கினார்.