பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ♦ அறிஞர் அண்ணா



இருட்டறையில் இன்னலுற்ற மக்கள் இன்பங் காண விழைந்த ஒவ்வொரு சமயமும் ஒடுக்கப்பட்டனர். ஆண்டை--அடிமை; உயர்ந்தவன்-தாழ்ந்தவன்; மதக்குரு--பக்தன் ; மிராசு-உழவன்; பிரபு--பணியாள்; முதலாளி--தொழிலாளி இவர்களிடையே ஏற்பட்ட வர்க்கப் போராட்டங்களே, உலக வரலாறாகும். கலையுலகிலும் கருத்துலகிலும் மற்ற நாடுகளுக்குக் கருவூலமாக விளங்கிய கிரேக்க நாடு இவ்விதமான போராட்டத்திலேயே உருக்குலைந்தது. ரோம் தனியரசு வீழ்ந்ததற்குக் காரணம், இத்தாலி நாட்டில் ஏற்பட்ட உயர்ந்தவன்--தாழ்ந்தவன் என்ற பிறப்புப் பேதம். இத்தகைய போராட்டங்கள் ஒன்றிரண்டல்ல, நூற்றுக்கணக்கில் நடந்துள்ளன. தோற்றவர்கள் உள்ளம் உடைந்தனர் பின் வாங்கினர். போராட்டத்தின் இறுதியில், புரட்சிப் புயல் வீசியது- அல்லது புகையின் வெம்மையிலே இரு வர்க்கத்திலும் பெரும் பகுதி அழிந்தது. புயல் ஓய்ந்த போதிலும், புயலினால் வீழ்த்தப்பட்ட பழமை மரங்கள் மீண்டும் மண்ணில் நிலை நிறுத்தப்படவில்லை.

இந்தப் போராட்டங்களின் வரலாற்றை நன்றாக அலசிப் பார்த்தவர் மார்க்ஸ், பிரபுக்கள்-முதலாளிகளின் கொடுங்கோன்மைகள் வெகு நாளைக்கு நிலைக்கா தென்பதையும், உழைப்பாளிகளின் முயற்சியால்தான் உழைப்பாளர் உலகு மலரும் என்பதையும் அவர் எடுத்துக் காட்டினார். அவருடைய தெளிந்த முடிவு ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களை ஒன்று சேர்த்தது-நலிவுற்ற உள்ளத்தை புலியுளமாக்கியது - கசங்கிய கண்கள் கனலைக் கக்கின. மேதினி விழித்தது-மே தினம் பூத்தது! முதல் மே தினம் 1889-ல் பாரிசில் கூடிய உலக சமதர்மக் குழுவினரால், தொழிலாளரின் நன்னாளாகத் தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு மே தினத்திலும், அவ்விழாவைக் கொண்டாடக் கூடியிருக்கும் தொழிலாளர் தொகை தேய்வதாகக் காணோம். எங்கு உரிமை சூறையாடப்படுகிறதோ-உழைப்பு