பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி 27 அலுவலகங்களில் வேலை செய்கின்றவர்களுக்கு அரசியல் மன்றங்களில் ஒரு பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்; குறிப்பாக-இரயில்வே தொழிலாளர்களுக்காகவும், வங்கித் தொழிலாளர்களுக்காக வும், தபால் - தந்தித் தொழிலாளர்களுக்காகவும் அரசியல் மன்றங்களில் இடம் அளிப்பது அவசியம்; ஏனென்றால் அவர்கள் அங்கே வந்து பேசினால், பிரச்சினையில் உயிரோட்டம் இருக்கும்; வெறும் அரசியல்வாதிகள் பேசினால் பிரச்சினையில் உயிரோட்டம் இருக்காது; எனவே, இதை எப்படி நீங்கள் நிறைவேற்றிக் கொள்வது என்பதையும்-நான் இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்; நீங்கள் கேட்டால், அரசாங்கம் உங்களிடத்தில் சற்று பய பக்தியோடு நடந்துகொள்ளும்; அமைச்சர்களும் தொழிலாளர்களாகிய உங்கள் பிரச்சினைக்காக இணங்கி வருதல் கூடும்; ஏனென்றால் இப்பொழுது இருக்கின்ற உறுப்பினர்கள், சட்டசபையில் எல்லாப் பிரச்சினைகளைப் பற்றியும் பேசுதல் என்பது இயலாது; எனவே எல்லாத் துறைகள் பற்றியும் நாங்கள் பேச முடியுமென்று நீங்கள் நம்புகிறீர்களா? அது முடிகிற காரியமா? ஆகவே, யாராவது ஒருவர் அஞ்சல் இலாகாவில் இருந்து சட்டமன்றத்திற்கு-மக்கள் சபைக்கு வந்தால், குறிப்பிட்ட நேரத்தில் பிரச்சினையைத் தெளிவாக விளக்க முடியும்; எனவே இப்படிப்பட்ட இடங்களில் நீங்கள் இருக்க வேண்டும் என்பதை நான் உணர்கிறேன். (15-3-60-ல் அஞ்சல் ஊழியர் கூட்டத்தில் அண்ணா) 9.எல்.அய்.சி. ஊழியர் நிலை குறித்து அண்ணா மின் விசைக் கணக்குப் பொறிகளை புகுத்துவதால் ஏற்படும் பயங்கரமான விளைவுகள் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றன- எதிர்க்கின்றோம்.