உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 31
நீங்கள் உண்மையிலேயே பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள்.உங்கள் பிரச்சினையை மூன்று முறையில் அணுக வேண்டும். ஒன்று--அதிகாரிகளுக்கும்--உங்களுக்கும் உள்ள உறவு; இரண்டாவது--முதலாளிகட்கும்--உங்களுக்கும் உள்ள உறவு; மூன்றாவது--பொதுமக்களுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு, இந்த மூன்று தொடர்புகளையும் ஆராய்ந்து பார்த்தால், இருக்கின்ற சிக்கல் தீர வழிபிறக்கும்.
"சமுதாயத்துக்கு எந்தவித ஆபத்தும் இல்லாதபடி பாதுகாப்புடன் ஓட்டக்கூடியவர்கள் டாக்சி டிரைவர்கள்” என்ற எண்ணம் சமுதாயத்தினருக்கு ஏற்பட வேண்டும்.
டாக்சி ஓட்டுபவர்கள் தமது. பணியை, 'மிகப் பொறுப்பான பணி' என உணர்ந்து பணியாற்றினால், 'சமுதாயத்துக்கு அவர்கள் எவ்வளவு தேவையானவர்கள்' என்பது மக்களுக்குப் புரியும்!
நீங்கள் பொதுமக்களிடம், மரியாதை--பண்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்.
பொதுமக்களும், டாக்சியில் ஏறியதும், தங்களை விட டாக்சி ஓட்டுபவர்கள் கீழ்த்தரமானவர்கள், என்ற நிலையில் பேசக்கூடாது!
உங்களை நீங்களே பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அதற்குச் சரியான வழி, 'சங்கத்தில் அங்கம் வகிக்காத ஆளே இல்லை' என்கிற அளவில் எல்லோரும் உறுப்பினர்களாக ஆகி, சங்கததைப். பலப்படுத்திக் கட்டிக் காத்து வருவதுதான்!
(1961:ல் தமிழ்நாடு டாக்சி, ஆட்டோ, ரிக்ஷா டிரைவர்கள் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் அண்ணா)