பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ♦ அறிஞர் அண்ணா



11.மீனவர்கள் பற்றி அண்ணா

நகத்திலே அழுக்குப் படாமல் மற்றவர்கள் உழைப்பினை உறிஞ்சி வாழ்பவர்கள், சமுதாயத்தில் உயர்ந்த சாதிக்காரர்களாகக் கருதப்படுகிறார்கள்; ஆனால் கட்டுமரத்திலே ஏறி கடலில் வெகுதூரம் சென்று வீடு திரும்பும் இவர்கள் செய்யும் தொழிலின் காரணத்தால், அருவருப்புடன் பார்க்கத் தக்கவகையில் இருக்கிறார்கள் செம்படவர்கள் என்று கேவலமாக அழைக்கப்படுகிறார்கள்.

இந்தச் சமுதாயத்தில் உள்ள இரண்டொருவர் சுயமரியாதைக் கட்சியிலே சேர்ந்த பின்னர் தெளிவு பெற்ற பின்னர், இந்தச் சமுதாய மக்கள் கேவல மானவர்கள் அல்லர் செம்படவர்கள் அல்லர்'; 'மீனவர்கள்--மீனவ சமுதாயத்தினர்' என்று அழைக்கப் பட்டனர்!

இந்த நாட்டிலேதான் இந்தத் தொழில் இவ்வளவு கேவலமாகக் கருதப்படுகிறது; இந்தத் தொழிலை நடத்துகின்ற மக்கள் கேவலமாக--இழிவாக நடத்தப் படுகிறார்கள்; ஆனால் மேலை நாடுகளில் இந்தத் தொழில், மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது!

மனைவி, மக்களைவிட்டுப் பிரிந்து--'திரும்பி வருவது நிச்சயம்' என்று சொல்ல முடியாத நிலையில்--கட்டு மரத்தில் 50 மைல் 60 மைல் தூரம் ஆழ் கடலில் சென்று, மீன் பிடித்துக் கொண்டு வீடு திரும்புகிறார்கள்; பிடித்த மீனை விற்று வாழ்க்கை நடத்துகின்றார்கள்.

நிலத்திலே விதை விதைத்து--தண்ணீர் பாய்ச்சி--களை எடுத்து--உழைப்பின் பயனை அனுபவிக்கிறார்கள்; ஆனால் உங்களுக்கோ, அப்படி இல்லை; கடலிலே ஏராளமான மீன் வளம் இருக்கிறது; விதைக்காது விளையும் கழனிபோல் கடல் இருக்கிறது; இருந்தும், உங்களிலே எல்லாவித வசதியோடும் வாழ்க்கை நடத்துபவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? தலைமுறை தலைமுறையாக இதே நிலையில் நீங்கள் இருக்கிறீர்களே ஏன்?

(1-4-61'ல் தாழம்பேட்டை கூட்டத்தில் அண்ணா)