பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அறிஞர் அண்ணா தீர்மானத்தை இந்த நாட்டில் உள்ள எல்லாக் கட்சியினரும் ஆதரித்தனர் தலைவர் பி.டி. இராசன் போன்ற இந்த நாட்டை ஆண்டவர்கள் ஆதரித்தனர்; ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள காங்கிரசார் ஆதரித்தனர்; 'நாட்டை ஆளவே கூடாது என்று சபிக்கப் பட்டிருக்கின்ற என்போன்றவர்கள் ஆதரித்தனர்இப்படி எல்லோரும் ஒருமுகமாக ஏற்றுக் கொண்ட தீர்மானத்தை மத்திய அரசாங்கம் புறக்கணித்து விட்டது! எனவேதான், இது போன்ற விழாக்களில் என்னைப் போன்றவர்களை அழைப்பதைக் காட்டிலும் 'மத்திய அரசாங்க அமைச்சர்களை அழைத்து வந்து காட்டுங்கள்- இங்கே குவிந்துள்ள கைத்தறித் துணிகளின் உயர்ந்த தரத்தினையும், அவைகளை நெய்யும் கைத்தறியாளர்களின் கைத்திறனையும் அவர்களுக்குப் புலப்படுத்துங்கள் - அப்படியே அந்த அமைச்சர்களைக் கைத்தறியாளர்கள் வாழும் குடிசைகளுக்கு இட்டுச் சென்று, அங்கு அவர்கள் படும் துயரங்களையும் காணச் செய்யுங்கள் - அவர்களது பசி நீங்க அமைச்சர்களிடம் வழிவகை காணுமாறு கூறுங்கள்' என்று கூறுகின்றேன், இங்கு பேசிய அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள், 'கைத்தறியாளருக்கு நிரந்தரமான பாதுகாப்புக் கிடைக்க மத்திய அரசாங்கம் தான் வழி செய்ய வேண்டும்; சிலரக துணிகள் நெய்வதைக் கைத்தறிக்கே ஒதுக்க வேண்டும். என்று கூறியிருக்கிறார். 'காய்ச்சல் விட்டால் கைகால் பிடிப்பு விடும்' என்பது போல, மத்திய அரசாங்கம் மனது வைத்தால்தான் கைத்தறி வாழும் என்கிறார் மந்திரி சுப்பிரமணியம். காய்ச்சல் விடுவதற்கு செந்தூரமா - பஸ்பமா - பச்சிலையா இன்ஜெக்ஸனா-யுனானி முறையா சித்த வைத்தியமா- ஓமியோபதியா- நாட்டுமுறையா- ஆங்கில முறையா என்பதை நாம் வேறு அரசியல் மேடைகளில்