பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ♦ அறிஞர் அண்ணா



தருகின்ற உள்ளங்கள்தான் மீண்டும் மீண்டும் தந்து கொண்டே இருக்கும்; அதனால்தான் இப்படிப்பட்ட வசதிகளைச் செய்துள்ள இந்த நிறுவனத்தின் நிர்வாக உரிமையாளரையே மீண்டும் மீண்டும்-தொழிலாளர்களது வேண்டு கோளான திருமண மண்டபத்திற்கான செலவையும் ஏற்று- அதனை முடித்துத் தரும்படிக் கேட்டுக் கொண்டுள்ளனர். தொழிலாளர் நலனில் இத்துணை அக்கறை காட்டுபவர் நிச்சயம் அதையும் முடித்துத் தருவார் என்று நம்புகிறேன்.

இந்தக் காலனிக்கு அரசின் உதவி எந்த அளவுக்குக் கிட்டும் என்பதை, அதிகாரிகளைக் கலந்து கூறுகிறேன்.

"அரசு உதவும்" என்று சொன்னேன்; மத்திய அரசு எந்த அளவிற்கு நம் மாநில அரசுக்கு உதவ முன்வருகிறது என்பதைப் பொருத்துத்தான் சொல்ல முடியும்.

எனவே இந்தத் தொழிற்சாலை அதிபர் மித்ரா அவர்களுடனும், தொழிற்சங்கத் தலைவர் டி.எஸ். இராமானுசம் அவர்களுடனும் கலந்து, 'யார் யாரிடம் எவ்வளவு பெறமுடியும்' என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு--கட்டடக்கலை நிபுணரை அழைத்துக் கலந்து பேசி, எவ்வளவு மலிவாக, இந்தக் கட்டடங்களை நேர்த்தியாகவும், உறுதியாகவும் கட்டித்தர முடியும் என்பதையும் தெரிந்துகொண்டு--பிறகு தமிழக அரசின் உதவியை நாடினால், நிச்சயம் இன்றைய தமிழக அரசு தொழிலாளர்களின் குடியிருப்புக்கு நிதியுதவிட-ஒத்துழைத்திட பின்வாங்காது என்று உறுதி கூறுகின்றேன்.

இப்படிப்பட்ட குடியிருப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதால், தொழிலாளர்களுக்குச் சுறுசுறுப்பும்-உற்சாகமும்-ஊக்கமும் தொழிலின்பால் உண்டாகிறது; அதனால் ஏற்படும் உற்பத்திப் பெருக்கத்தினால், முதலாளி உள்பட தொழிலாளர்களும் மேலும் நன்மைபெற வழி ஏற்படுகிறது.

ஒரு முதலாளி ரூ. 2 லட்சம் கொடுத்து வாங்கிய இயந்திரம் திடீரென்று கெட்டுவிட்டதாகக் கூறினாலும்,