பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ♦ அறிஞர் அண்ணா



தொழிலாளர்கள் வாழ்ந்தால்தான், நாட்டில் செல்வம் வளர்ந்தால்தான், நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குச் சந்தை கிடைக்கும்!

நீங்கள் ஒரு டைப்ரைட்டரைச் செய்கிறீர்கள் என்றால், அதை வாங்கும் நிலையில் மக்கள் இருக்க வேண்டும்; அடி மட்டத்தில் இருப்பவர்கள் மிச்சப்படுத்தும் நிலையில் இல்லையென்றால், உங்கள் உற்பத்திக்கு வழி இல்லாமல் போய்விடும்!

உரிமைகளுக்காக-வசதிகளுக்காக நீங்கள் எடுத்து உரைக்கிற கோரிக்கைகளுக்கு நாங்கள் துணை நிற்போம்!

(14-3-67ல் சிம்சன்குரூப் தொழிலாளர்களுக்கிடையே அண்ணா)


22. அவன் கேட்பது வாழ்வு

அவன், படைப்புத் தொழிலில் வல்லவன்!
அவன், பிறர் நலம் நாடிடும் நல்லவன்!
அவன், பரிவும் கனிவும் ததும்பும் உள்ளம் உள்ளவன்!
அவன் பகட்டும் பசப்பும் அறியாதவன்!
அவன், சூதும் சூழ்ச்சியும் தெரியாதவன்!

அவன், தான் செய்யும் பணியின் கணக்குப் பார்க்காதவன்!.

அவன், இல்லையேல், அரசு இல்லை! வெற்றி முரசு இல்லை! அணி பணி இல்லை! அமைதி இல்லை! இல்லம், இன்பம், இல்லை! ஏற்றம் என்பதே இல்லை

அவன், அவனிக்கே ஓர் அச்சாணி!

அவன், கரம் பட்டதாலேயே செழுமை காண்கின்றோம்!

அவன், வியர்வை கொட்டியதாலேயே மண், மணம் பெறுகிறது!

அவன், அழித்த காடுகள் பலப் பல!