பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அறிஞர் அண்ணா கீர்த்திமிக்க மன்னர்கள் நடத்திய, வீரப் போராட்டங் கள் - பிடித்த கோட்டைகள்-வெட்டிய அகழிகள்-அழித்த நகரங்கள் - கட்டிப் பிடித்துவந்த கைதிகள் - வெட்டிக் குவித்த எதிரிகள் -அவர்கள் வீசிய வாட்களின் கூர்மை வாட்கண்ணாரிடம் அவர்கள் பணிந்த காட்சிகள்-அரண் மனைச் சதிகள் - அவைகளின் விளைவுகளான படு கொலைகள் - பட்டமும் பதவியும் பெற்ற சீமான்கள் பாடும் பராக்கு - அவை பெறாதவரிடம் பகைமை-இவைகளை யெல்லாம் விரிவாக விளக்கமாக-சுவையும் கலந்ததாக ஆக்கித் தருவதையே வரலாற்று ஆசிரியர்கள் நெடுங்காலம் முறையாகக் கொண்டனர். எந்த கோலாகலத்துக்கும் அடிப்படை தரும் மக்களின் எழுச்சி-வீழ்ச்சி பற்றியும் வீரப் போரிட்டு அவர்கள் வெற்றி பெற்றது குறித்தும், இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில காணக் கிடக்கும்; எனினும் அரண்மனையும் - மாளிகையும்-களமும்-கொலு மண்டபமும் வரலாற்றைத் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டதால், ஏழையின் கண்ணீரும், பெரு மூச்சும் அதில் இடம் பெறவில்லை! மாடியில் உலவும் முல்லை சூடிய மங்கையின் எழிலைக் காண்போருக்கு, அந்தக் கன்னி வாழும் கட்டிடத்தின் அடிப்படையின் ஆழம்--அமைப்புப் பற்றி எண்ணிட நேரம்தான் கிடைக்குமா? மேலும், துதி பாடகர்களும் புகழ் பரப்பும் புலவரும் தான் வரலாற்றுச் சுவடிகளைத் தொகுத்து அளிக்கும் பணியினை மேற்கொண்டனர் - துவக்கத்தில்; எனவே அவர்கள் ப்டை அஞ்சப் போரிடும் மன்னரைக் குறித்தும்- அவன் மனம் உருக ஆடிடும் துடியிடை பற்றியுமே தீட்டிக் காட்டினர்! எனினும் இன்றுபோல் என்றும் மக்கள் இருந்து வந்தனர்- உழைத்த வண்ணம்-உருமாறிய வண்ணம்!