பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி கண்ணீர் பொழிந்தபடி- பெரு + 75 மூச்சுடன் - அடிமைகள் இருந்து வந்தனர்-எடுபிடிகளும் இருந்தனர்! உழவர் உழன்று வந்தனர். தொழில் செய்வோர் பாடுபட்டு வந்தனர். எது செய்து வாழ்வது என்று தெரியாது திகைத்து அலைந்து கொண்டிருந்தவர்களும் இருந்து வந்தனர். அவர்களின் மனப்போர் மண்டிலம் ஆண்ட மன்னர்கள் நடாத்திய போர்களைவிட அதிகம் - ஆனால் - வெளியே தெரியாது! வாழ்வுக்காக அவர்கள் நடத்திய போர்களும் பல- ஆனால் வரலாற்றிலே அவர்கட்கு போதிய இடம் தரப்பட வில்லை. மாண்பு மக்களின் சார்பாகப் பாடுபடும் வளர்ந்துள்ள இதுபோதுதான், வரலாற்றினைப் புதுப்பித்து-மக்களை முன்னால் வைத்து-சம்பவங்களைத் தொகுத்திடும் முறை ஓரளவு வளருகிறது! வளர வேண்டிய அளவு அதிகம் இருக்கிறது! ஏழையின் மனதிலே நெடுங்காலமாக உருவாகிக் கொண்டுவந்த கோபம், எரிமலை நெருப்பாகக் கக்குவது போல சில வேளைகளில், புரட்சிகளாக மாறின; ஆனால் தெளிவான திட்டம் கிடையாது - கொள்கை வளர வில்லை! 'வேறு வழியில்லை' என்ற போது, 'வெட்டு-குத்து' என்றனர். வெட்டப்பட்டனர்! மாண்டவர் போக மீதமிருந்தோர். மீண்டும் செக்கு மாடுகளாக ஆக்கப் பட்டனர். உழைப்பாளிகளின் மனக் குமுறல்கள் வெடித்த சம்பவங்கள் பல நாட்டு வரலாறுகளிலே சிற்சில காணப்படும்; ஆனால் அவைகள் மகா அலெக்சாண்டரின் வெற்றிப் படைகள் கிளப்பிய தூசியால் மறைக்கப்பட்டு விட்டன! .