பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊன்றுகோல் கரந்தையிற் சங்கங் கண்டோர் கனிந்தநல் லன்பின் ஊறிச் சுரந்ததோர் மலரைச் சூட்டிச் சொல்லரும் மகிழ்வு பெற்றார்: பரந்தநம் நாட்டில் தோன்றும் பற்பல கழகச் சார்பில் நிரந்துபா மலர்சொ ரிந்து நெஞ்சினைத் திறந்து வைத்தார். இறுதியில் மணியார் இயம்பினர் நன்றி. 'பாட்டினும் உரையினும் பகர்ந்தன யாவும் கூட்டு மன்பைக் குறித்தன வேயாம் பன்மொழிப் புலவர் பாரதிச் செம்மல்: என்னுயிர்த் தோழர் இவர்முதலாகச் சொற்றநற் பெரியோர், உற்றுழி யுதவும் பற்றுள சபையார்" மற்றும் இவ்வுழை இவ்விழா நிகழ்ச்சிகள் செவ்விதின் இயக்கிக் கவ்விய அன்புடன் கடமை யாற்றியோர் மலரும் அன்பின் விளைதரும் விலையிலா மலரினை ஈந்து மனமகிழ் வூட்டியோர் அனைவரும் என்றும் நினைதற்குரியார்: அணிமையில் நிகழ்ந்த அண்ணா மலைமன் மணிவிழா நாளில் மன்னர் மனையுள் அளவிலாச் செவ்வியர் அடங்கி யிருந்தனர். அத்தகு மன்னர் அடியேன் சிற்றிலில் அடங்கி யிருந்து தொடங்கின ராயின் என்தவப் பேற்றை யாதென மொழிவேன்’ என்றுதம் நன்றியை எடுத்துரைத் தனரே. -அஆஆஆ.அ தெ.பொ.நாவலர் ச.சோ.பாரதியார் கரந்தை நீ.கந்தசாமிப் பிள்ளை.'சன்மார்க்கச 137 12 10 15