பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊன்றுகோல் | 3 || ஆழ்ந்த மொழிப் பற்றையும் இனப்பற்றையும் கிளர்ந்தெழச் செய்தன. 1940ஆம் ஆண்டில் தந்தை பெரியான்தன்மான இயக்கத்தில் தொடர்பு கொண்டார். இத்தொடர்பு அவருடைய ஆளுமையை வெற்றிபெறச் செய்தபோதிலும் 1943ஆம் ஆண்டு வித்துவான் தேர்வில் தோல்வியுறச் செய்தது. அவர் தோல்லியுறவில்லை: தோல்வியுறுமாறு செய்யப்பட்டார். இடையிலே நவாபு டி. எசு. இராசமாணிக்கம் நாடகக்குழு தம்பால் பணியாற்ற வருமாறு அழைத்தது: செ.றார். அங்கிருந்த "சிறைவாழ்க்கை” யும் மதவழிபாட்டு முறைகளும் வெறுப்பை விளைத்தன. எனவே போன வேடு அழியுமுன்னரே திரும்பி வந்துவிட்டார். பின்னர்த் தம்மைத் தோல்வியுறச் செய்தவர்களைத் \\ தோற்கடிப்பதற்காகத் “தலைமறைவாக” இருந்து படித்து 1947 இல் வித்துவான் பட்டம் பெற்றார். 1947-1949 வரையிலான இரண்டாண்டு காலம் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இக்காலம் அவர்தம் எழுத்து வன்மை உரம் பெற வாய்ப்பாக அமைந்தது மட்டுமின்றி அறிஞர் பலரோடு தொடர்பு கொள்ளவும் ஏற்றதாக இருந்தது. போர்வாள்.கதிரவன், குயில். முருகு, அழகு முதலிய இதழ்கள் இவர்தம் சிறுகதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் தாங்கி வந்தன. அப்பொழுது புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த"பொன்னி எனும் இலக்கிய இதழ் “பாரதிதாசன்பரம்பரையில் முன்னணியில் நிற்பவராக அறிமுகம் செய்து வைத்தது. சென்னையில் பேராசிரியர் மயிலை. சிவமுத்து, தமிழ்த் தென்றல் திரு.வி.க., கவிஞர் வாணிதாசன் ஆகிய புலமைச் சாறோர் களுடன் இவர் இடையறாத் தொடர்பு கொண்டிருந்தார். 1949ஆம் ஆண்டு பேராசிரியர் மயிலை. சிவமுத்து அவர் களின் சீரிய தலைமையில் கலைச்செல்வி என்னும் நலத்தகை யாரைக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்ட த்தில் தனியாக எதிர்ப்பதைக் காட்டிலும்துணையோடு சென்று எதிர்ப் து தான் வெற்றிக்குரிய போராட்ட முறை என்பதனால் தக்க துணை யோடு (துணைவியாரோடு) ஈடுபட்டார்.