பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்று கோல்

செஞ்சுடர்ப் பரிதி கண்டோர்
சிந்தையுள் மகிழுங் காலை
அஞ்சிடு மாறு வாழ்வில்
ஆரிருள் படர்ந்த தம்மா!
பிஞ்சினைப் பற்றும் நோயாற்
பெற்றவர் நைந்து நொந்த
நெஞ்சின ராகி நாளும்
நெடிதுயிர்த் தங்கு வாழ்ந்தார்
21

காற்குறை யதனைக் கண்டு
கலங்கின ரேனும் பெற்றோர்
மேற்குறை நேரா வண்ணிம்
விழிப்புடன் காத்து வந்தார்
பார்க்குரை செய்ய வல்ல
பண்டித மணியா வாரென்
ரர்க்கது தெரியும்? காலம்
ஆக்கிடும் செயல்தான் என்னே!

22