பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சபைகாண் காதை



எளிதாகச் சென்றுவரும் வாய்ப்பே யின்றி
இலங்கிடுமவ் வூருக்கு விழவு காண
வெளியூரில் வாழ்பவர்கள் சகடு கட்டி
விழைந்தோடி வந்தங்குக் குழுமு வார்கள்;
ஒளிகாலும் மணியெருதுக் கூட்டம் உண்ண
உருவாகும் முன்கூட்டி வைக்கோற் குன்றம்;
அளியாளர் ஒவ்வொன்றும் எண்ணி எண்ணி
அழகுறவே விழா நடத்தி வந்தார் அன்று.24

நூலறிவும் நுண்மதியும் மாட்சி யுற்ற
நுழைபுலமும் நிறைசான்றோர் விழாவில் வந்து
வாலறிவுத் திறங்காட்டி உறைவர் பன்னாள்
வளர்பயிர்க்கு மழைபோல வாய்த்த தங்கே:
காலமுணர் கதிரேசர் புலவர் தம்பால்
கலந்துசவி மனமகிழ்ந்து செழித்து நின்றார்,
சாலுவுணர் இவா சபையும், அந்தச்
சபையாலே இவருமுடன் வளரக் கண்டோம். 25

தாங்கற்ற வடமொழியிற் சில நூல் தேர்ந்து
சபையுதவத் தமிழ்மொழியிற் பெயர்த்த ளித்தார்;
ஈங்குற்ற அவற்றையெலாம் வெளியீ டாக்கி
எம்சபைதான் உலகுக்குக் கொடுத்த தன்று,
வீங்குபுகழ் யாங்கணுமே கதிரே சர்க்கு
விரைந்ததனாற் பரவியது சபையின் பேரும்
ஓங்கியது; நாளுக்கு நாள்ம லர்ந்தே
ஒன்றற்கொன் றுதவியென வளரக் கண்டோம். 26