பக்கம்:ஊரார்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


"படிடா, இந்த சினிமா புத்தி வேணாம்டா உனக்கு?"

"நீங்க மட்டும் பார்க்கலாமா?"

"நான் சாமியாரு. நான் என்ன வேணாலுஞ் செய்யலாம்"

"சாமியாரு சினிமா பாக்கலாமா?"

சாமியாருங்க கல்யாணமே செஞ்சுக்கறாங்களே! சாமியார்லே ரெண்டு ரகம். சாமியாரா இருந்துகிட்டே சம்சாரியா வாள்றது ஒரு ரகம். அசல் சாமியாராவே வாள்றது இன்னொரு ரகம். நான் முதல் ரகம். எனக்கு ஆசை போகல்லே. வாள வசதியில்லாததாலே சாமியாராயிட்டேன். நான் என்ன சாமியார்? சோத்துச் சாமியார்! மசால்வடைச் சாமியார், பிரியாணி சாமியார். காஞ்சி புரத்திலே இருக்காரு ஒரு சாமியாரு. போய்ப்பாரு, வயிறு ஒட்டிப்போய்... கண்ணுவே ஒரு ஒளி வீசும், பாரு...'

"தாத்தா, இந்த ஊரார் ரகசியம் பூரா உங்களுக்குத் தெரியுமா?”

"அக்கு அக்காத் தெரியுமே. எல்லார் சங்கதியும் என் கிட்டே வந்துடும். ஜோசியம் கேக்க வருவாங்க. வைத்தியம் செஞ்சுக்க வருவாங்க. இந்த இரண்டிலேயும் அம்புடாத ரகசியம் என்ன இருக்குது? டெய்லர் கடை கேசவன், ஆப்பக்கடை ராஜாத்தி இவங்க ரெண்டு பேருக்குள்ளே ஒரு ரகசியம், அவுட்போஸ்ட்தாணாக்காரு, டெண்ட் சினிமா தங்கப்பனோட தங்கச்சி இவங்களுக்குள்ளே ஒரு ரகசியம், நாட்டாமை கோதண்டம், ட்ராமா காரி ரத்னாபாய் - அது ஒரு ரகசியம். இப்படி எல்லார் ரகசியமும் எனக்குத் தெரியும். அதோ வருது பாரு ரத்னா பாய். இப்ப நேரா இங்கேதான் வரும். இதோ இந்த அரச மரத்தடியிலே அந்தப் பக்கம் இருக்குதே புள்ளையார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/9&oldid=1283830" இலிருந்து மீள்விக்கப்பட்டது