பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 21 "எங்கய்யா இல்லாம நான் எப்படி வந்துட்டேன்? அது கிடக்கட்டும். இனிமேல், இது ஒம்ம மாடு... சரிதான?" "நம்ம மாடுன்னு சொல்லு பிள்ள..." "மணவறத் தட்டுல இருக்கிற பொண்ணு மாப்பிள்ளயளே மாறிப்போற காலத்துல கழுத்துல தாலி ஏறு முன்னால, நான் அப்டிச் சொல்லப் போறதில்ல... அண்ணிக்கு எப்டி இருக்கு?" ஆண்டியப்பன், அவளை முறைத்துப் பார்த்தான். பிரித்துப் பேசும் அவளிடம், ஒம்மா புத்திதான. ஒனக்கும் இருக்கும் என்று சொல்லப் போனவன், கோபத்தை அடக்கிக் கொண்டு, வார்த்தைகளை விடக்கூடாத வன் போல், உதட்டைக் கடித்தபோது, தங்கம்மா, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, மாட்டைத் தடவி விடுவதுபோல். அதன் முதுகைத் தடவி விட்டு. அந்தச் சாக்கில், மாட்டின் முதுகின் மீது வந்திருந்த அவன் கையருகே, தன் கையை கொஞ்சங் கொஞ்சமாகக் கொண்டு வந்து, அவன் கையைப் பிடித்து, லேசாக வருடிக் கொண்டே, "இப்படிச் சொன்னாலாவது... ஒமக்கு ரோஷம் வந்து, சுந்தரிய, அபிமன்யூ கூட்டிகிட்டு போனது மாதிரி, என்னைக் கொண்டு வருவீரான்னு பாக்கேன்" என்றாள். பிறகு அவன் கைமேல், தன் கை அதுக்காக படவில்லை என்று காட்டும் வகையில், "அண்ணி எப்படி இருக்காவ?" என்றாள். அவனும் அவள் மேற்கொண்டு எதையாவது பேசி, இப்போது ஏற்பட்ட நெருடலின் நெகிழ்வை கலைத்துவிடக் கூடாது என்று நினைத்தோ அல்லது தங்கையின் நிலையைக் கருதியோ"வீட்டுக்குள்ள... சின்னான் அக்காளோட... எதையோ முனங்கிக் கிட்டு இருக்காள்... போயிப் பாரு" என்றான். தங்கம்மா, துள்ளிக் குதித்துப் போனபோது, ஆண்டியப்பனின் மனமும் துள்ளிக் குதித்தது. இந்தப் பசுமாடு... எட்டு லிட்டர் பால் கறக்குது... பதினாலு ரூபாய்... சிங்கத்துல... பால் வாங்காம போனாலும் பரவாயில்ல... வெளியில விற்று பணத்தைக் கட்டலாம். ஐந்து ரூபாய் லோன்ல கழிந்தால், ஐந்து ரூபாய் மாட்டுத் தீவனத்துக்குப் போய்விட்டால், தினம் நாலுரூபாய். மாதம் நூற்றிருபது ரூபாய். தங்கை மகனுக்கு. இனிமேல் நாடிமுத்து பயக்கிட்ட வாங்குற தண்ணிப் பாலுக்குப் பதிலா... நிஜப்பால கொடுக்கலாம். சேருற பணத்துல... தங்கச்சியோட மூக்குத்திய மீட்டணும். ஒரு அட்டியல் செய்து போடணும். அதை, அவள் கழுத்துல மாட்டி, முறச்சிக்கிட்டு இருக்கிற அவள் புருஷன் கிட்ட கெஞ்சி கூத்தாடி, ஒப்படைச்சுடனும். பரமசிவம், அகங்காரம் பிடித்த மனிதர். நாலு நாளாய், வெளியூர்ல இருக்கார். ஊருக்கு வந்ததும், மாட்டை விட்டுவைப்பாரா? இந்த சொசைட்டி பயலுவ கூட, பாலக் கொண்டுபோனால், வாங்க