பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஊருக்குன் ஒரு புரட்சி கலப்புப் பசுமாடு, அவனைப் பார்த்து, தலையை சற்றே நிமிர்த்தி "ம்மா... ம்மா...' என்றது. பழைய மீசைக்காரன், அதன் மடுவைப் பிசுக்கி, பால் கறந்து கொண்டிருந்தான். அருகே மல்லிகாவும், பரமசிவத்தின் புத்திரிகளும் வாயளந்து கொண்டிருந்தார்கள். திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு. அந்தப் பக்கமாக வராத ஆண்டியப்பன் அப்போது அங்கே நடந்து கொண்டிருப் பதைப் பார்த்துவிட்டு ஓரளவு பயந்து வாயடைத்து நின்றார்கள். பரமசிவத்தின் வீட்டு மாடியில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த குமாரும், மாணிக்கமும் கீழே வரப்போவதை நினைத்து, அந்தப் பெண்கள் ஒரளவு ஆறுதலடைந்தபோது. அந்தப் புறநானூற்றுப் போர் வீரர்கள், இறங்கிய படிக்கட்டில் அப்படியே நின்றார்கள். ஆண்டி... ஏதாவது பண்ணிட்டால்... தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பன் சொன்னதுபோல், ஆண்டியின் கண்களில் அந்த பசுமாடு மட்டுமே விழுந்தது. சொந்தமாகி, சொந்தமில்லாமல் போன அந்த மாட்டை, அவன் பார்த்துக்கொண்டே நின்றபோது. மாட்டின் வால் நுனியைப்போல் மீசை வைத்திருந்த அதே மீசைக்காரன், மாட்டை அவிழ்த்துக் கொண்டு வீட்டின் பின்பக்கமாகப் Gurrorstsär. இப்போது அந்தப் பெண்களும், மெல்ல நடந்து, பிறகு வேகமாக நடந்து மாடிப்படியில் ஏறி, அங்கே நின்ற மன்மதர்களோடு சேர்ந்து கொண்டார்கள். ഥങ്ങl) பெண்கள், மாப்பிள்ளைகளுடன் திருமணத்திற்கு முன்பு சேர்ந்து நிற்கக் கூடாது என்ற மரபை மீறி, ஆபத்துக்கும், ஆண்டிக்கும் தோசம் இல்லை என்பது போல் அவர்கள் அங்கே போனார்கள். "ஆண்டியப்பன். அந்த மனிதப் பிறவிகளை நினையாமல், மாட்டுப் பிறவியை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்ததால், பிறவி எடுத்ததன் பொருள் புரியாதவன் போல் வீட்டுக்கு வந்தான். அவன். தனது வெறுங்கைகளைப் பின்னிக் கொண்டு விழிகளை உருட்டி, வழி புரியாமல் தவித்தபோது, தரையில் தலைவிரி கோலமாய், மார்புக் கட்டிகளின் குத்துசிக் குத்தலில் பல்லுடன் முனங்கலையும் சேர்த்துக் கடித்துக் கொண்டிருந்த மீனாட்சி, அண்ணனின் சொல்லாத நிலையை, கேளாமல் கேட்டவள்போல், தன் கைகளை மார்புப் பக்கம் கொண்டுபோனாள். பிறகு "ஒரு மஞ்சத் துண்டு தா" என்றாள். தங்கை, ஏதோ மருந்து கேட்கிறாள் என்று நினைத்து, அவன் செல்லரித்துக் கிடந்த அஞ்சறைப் பெட்டிக்குள் அதைவிட அதிகமாகச் செல்லரித்துப் போன, மஞ்சள் துண்டை எடுத்து, தங்கையிடம் மவுனமாக நீட்டினான். ஐந்து நிமிடம் கழித்து மீனாட்சி "இத... வச்சிக்க..." என்று சீட்டுக்கட்டில் உள்ள ஆட்டியன் வடிவத்தில் இருந்த மாங்கல்யத்தை நீட்டினாள். அதிர்ந்துபோன ஆண்டி, தங்கையையே உற்றுப் பார்த்தான்.