பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

அவனால் காணமுடியவில்லையா? இவரது கண்களில் தவழும அமைதி அவனுக்குத் தெரியவில்லையா?” என்று நினைத்தான்.

“அரசர்களுக்குக் கண்ணிருக்கிறதே தவிர, நல்லவற்றைப் பார்க்கும் பார்வை இல்லை” என்றான் கிருஷா ஆத்திரத்தோடு. அவனுக்கு அரசர்கள் என்றாலே பிடிக்காது.

தனது தந்தையின் கழுத்திலே செத்த பாம்பு தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கப் பார்க்க சிருங்கிக்குக் கோபம்