பக்கம்:எக்கோவின் காதல்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

117


மயக்கம் சிறிது தெளிந்து மெதுவாகக் கண்ணைத் திறந்தான்.

"நான் எங்கிருக்கிறேன்.”
"மருத்துவ விடுதியில்”
"யார்? மதுரமா?”
"ஆம்; உங்கள் எதிரி கிருஷ்ணன் கைது செய்யப் பட்டாராம்”
"கிருஷ்ணன்! அய்யோ! பாவம்! அவனா என் எதிரி? அவனுடைய அறியாமையல்லவா என் எதிரி"!
அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.

“இரணியன் - பிரகலாதன், இராவணன் - வீடணன், வாலீ - சுக்கிரீவன் இவர்கள் இந்த நாட்டிலே உலவும் வரையில் ‘கிருஷ்ணார்ச்சுன யுத்தம்’ நடந்துதான் தீரும். நான் யார்? அவன் யார்? என்ற எண்ணம் தோன்றித் தெளிவு பிறக்கும்வரை இந்தக் கதிதான்” என்று எண்ணிக்கொண்டே படுத்திருந்த அர்ச்சுனனுக்கு மதுரம் மருந்தை எடுத்துக் கொடுத்தாள்; தன் எண்ணத்திற்கு அவன் மருந்து தருவான் என்ற உறுதியோடு.

•••