பக்கம்:எக்கோவின் காதல்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்


'கமலா உன் கணவன் பெயர் கோபாலன் தானே!'

'ஆம்’ என்றாள்.

அங்கிருக்க முடியவில்லை என்னால். குமுறியது என் மனம். குழம்பி விட்டது என் மூளை. எழுந்து சென்றுவிட்டேன். கடற்கரையையும் மறந்து விட்டேன். ஆனால் கமலாவை மறக்கவில்லை. 'கமலா' கமலா'! என்று அடிக்கடி சொல்வ தைக் கேட்ட என் நண்பர்கள் என்னைப் பைத்தியம் என்பார்கள். அவர்களுக்கென்ன தெரியும்? இன்று அவள்மேற் காதலில்லை. சகோதரி என்ற எண்ணமா? அப்படியுமில்லை. ஏதோ ஒருவித அன்பு! அவ்வளவுதான்!

அவள் என் குடும்ப விளக்காக விளங்க வேண்டுமென்று எண்ணினேன். ஆனால், அவள் அணைந்தவிளக்கு. ஆனாலும் பரவாயில்லை, மீண்டும் ஒளி பெறச் செய்யலாம் என்று எண்ணினேன். அந்த ஆசையையும் அணைத்து விட்டாள். அவள் என் நண்பன் மனைவி என்பதைத் தெரிந்துகொண்ட பிறகும் எப்படி விரும்பும் என் மனம்? நல்ல வேளை அவளிடம் என் கருத்தைச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் என்ன வேதனைப்பட்டிருப்பாளோ? என் வாழ்வையும் அணைந்த விளக்காக்கி விட்டாள்.

(ஆசிரியர் முதன் முதல் எழுதிய கதை இது.

'அழகு' என்ற மாத இதழில் வெளிவந்தது.) [][][]