பக்கம்:எக்கோவின் காதல்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
அழிந்து விடுமோ?

கவிஞர் மறைந்தார்.

கவிஞர் கண்ணனும், அவர் நண்பரும் கட்டு மரத்தில் ஏறிக் கடலில் சென்று கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று கட்டுமரம் கவிழ்ந்து விட்டது. கவிஞரைக் காணவில்லை. நண்பர் மட்டும் உயிரோடு கரை சேர்ந்தார்.

விடுதலை உணர்ச்சியைத் தூண்டும் வகையில் வீறு நடை கொண்ட கவிதைகளைத் தமிழகத்திற்குத் தந்த கவிஞர் இவர். கற்பனைச் செறிவும், உவமை நயமும், புதுமைப் பொலிவும் இவர் கவிதைகளிலே மின்னித் தவழ்ந்து விளையாடும். இத்தகைய கவிஞர் மறைவு தமிழ் நாட்டுக்குப் பேரிழப்பாகும்.

-வானவில்

சாதி சமயங்களை மோதித் தகர்த்தெறிய வேண்டு மென்பது அவன் எண்ணம். ஏழைகளின் துயரத்தை - அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகளை - உடைமைகளை அஞ்சாது எடுத்துச் சொல்லுவான். பெண்மையைப் பாழ்படுத்தும் பேதமையை வெறுப்பான்.