பக்கம்:எக்கோவின் காதல்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

நன்றி. நாங்கள் அந்த வழக்கத்தை மூடிய இடத்திலிருந்து மலர்ச்செடி முளைத்துள்ளது. அதாவது புனிதம் இன்னும் எட்டு மாதத்தில் தாயாகப் போகிறாள்!

அதற்குள் நான் சொன்னேன். ஆண் குழந்தை தான் பிறக்கும் -- அதற்கு வேலன் என்று பெயர் வைப்பேன் என்று.

அவள், 'இல்லையில்லை; பெண்தான் பிறக்கும்; நான் அதற்கு மரகதம் என்று பெயர் சூட்டுவேன்' என்று சொல்லுகிறாள்.

எப்படியோ இன்னும் எட்டு மாதத்தில் என் குடும்பத்தில் உங்களில் ஒருவர் தோன்றப் போகிறீர்கள்! என்று எழுதி, அஞ்சல் பெட்டியில் போடும் போது 'கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக' என்ற இராமலிங்கவள்ளலார் மறைமொழி என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

★★★