பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

யுமா? அல்லது, கங்காருவைப் போல்: பைக்குள்ளே வைத்துக் கொள்ளத்தான் முடியுமா? அதனால்தான்

பிறந்தவுடனே ஓடக்கூடிய சக்தியை எங்களுக்கு ஆண்டவன் கொடுத்திருக்கிருர். சிங்கமோ, சிறுத்தையோ வந்தால் ஓட வேண்டுமல்லவா ?

எங்களிலே சிறு குட்டிகள் ஒன்றுடன் ஒன்று சண்டை போடுவதுண்டு. மனிதர்கள் குஸ்திச் சண்டை போடுவது போல் அந்தக் காட்சி இருக்கும். ஆனால், இந்த குஸ்திச் சண்டையில் ஒருவரை ஒருவர் கடிக்கக் கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை. அதனால், சில சமயம் ஒன்றை ஒன்று நன்றாகக் கடித்து விடுவதும் உண்டு !

ஆப்பிரிக்காவில் சில பேராசைக்காரர்கள் இருக்கிறார்கள். எங்கள் இனத்தை வேட்டை யாடி அவர்கள் நிறையச் சம்பாதிக்கிறார்கள். எங்-