பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி"

- இப்படி ஒரு பழமொழியை நீங்கள் அடிக்கடி கூறிவருகிறீர்கள். உங்களில் யாரோ ஒருவர் எப்போதோ இதைச் சொல்லிவைத்திருக்கிறார். அதையே நீங்களும் திரும்பத் திரும்பக் கூறிவருகிறீர்களே!

'பன்றி பல குட்டி' என்பது சரிதான். ஆனால், சிங்கம் ஒரு குட்டி' என்பதுதான் தவறு. ஒரே பிரசவத்தில், மூன்று, நான்கு குட்டிகள் கூட எங்கள் இனத்தில் பிறக்கும்.

என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன். என் அம்மா என்னையும் என் தங்கையையும் ஒரே தடவையில்தான் பெற்றாள். முதலில் நான் பிறந்-

1213-1