பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

களுக்கு, வேட்டையாடுவது எப்படி என்பதைக் கற்றுக்கொடுக்கப் போகிறேன்” என்று சொன்னாள்.


“அப்படியா அம்மா! சரி, நாங்கள் தயார். புறப்படலாமா ?” என்று நான் கேட்டேன்.

அம்மா எங்களை அழைத்துக்கொண்டு வெளியிலே போனாள். மறைவான ஓர் இடத்தில் நின்று கொண்டிருந்தோம். அப்போது சிறிது தூரத்தில் ஒரு முயல் குட்டி துள்ளிக் குதித்துக்கொண்டு சென்றது. உடனே அம்மா என்னைப் பார்த்து, “நீ ஆண் பிள்ளை. முதலில் நீதான் ஆரம்பிக்க வேண்டும். அதோ, அந்த முயலை நீ துரத்திப் பிடிக்க வேண்டும். எங்கே, பிடி பார்க்கலாம்” என்று கூறினாள்.