பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகமதிய நண்பனவன்‌

முகமலர்ச்சி கண்டான்‌;

நகமுடனே சதையெனவே

நட்புரிமை கொண்டான்‌.4


இருவரிவர்‌ ஒற்றுமைக்கே

இணையில்லை கூற.

கிவேரைவிட்‌ டொருவர்பிரித்‌

திருந்ததில்லை வேறே.5


சாதிமத பேதமது

சாற்றியதும்‌ இல்லை;

நீதிநெறி நியமமதில்‌

நீங்கியதும்‌ இல்லை.6


ஒன்றெனவே உணவருந்தும்‌

உயர்குணத்தில்‌ நின்றுர்‌;

சென்றிறைவன்‌ அடிவணங்கும்‌

செய்கையிலும்‌ வென்றுர்‌.7


குதிரைகளின் குறிப்புணரும்‌

கலைகள்மிகக்‌ கற்றுர்‌;

எதிரொருவர்‌ இல்லையென

இயம்பிடவும்‌ பெற்ருர்‌.8


2. தாயும்மைந்தனும்‌ :

இங்குனம் இவர்கள்‌ இன்புடன்‌ நாளும்‌

இருந்து வருதலுமே

மங்கள மாய்ப்ப்பதி னுறும் வயதினை

மன்னன்‌ அடைதலுமே.1

55