பக்கம்:எங்கே போகிறோம்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74 எங்கே போகிறோம்?

திட்டத்தையே அளிப்பதற்குரிய சூழ்நிலையே நிலவுகிறது.

ஒட்டகத்தின் முன் துரும்பெடுத்துப் போட்டு, சுமையை இறக்கிவிட்டதாக பாவனை செய்வது போல, மக்களுக்குச் சில சலுகைகளை அளிப்பதால் பயனில்லை. அதனால் பணவீக்கம் ஏற்படுகிறது. பணவீக்கத்தாலும் மறைமுகவரிகளாலும் விலைவாசிகள் ஏறிவிடுகின்றன.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிதி நெருக்கடி தோன்றி வளர்ந்து விடுகிறது. ஆண்டுக்கு ஆண்டு அரசின் நிதிநிலைத் திட்டத்தில் நிதிப் பற்றாக் குறை கோடிக்கணக்கில் உயர்ந்து விடுகிறது. செல்வர்களுக்கு நிறைய வரிச் சலுகைகளை அளித்தாலும் நாட்டில் முதலீடு பெருகவில்லை.

அதனால் கிடைத்த பணம், ஆடம்பரமான நுகர்வுப் பொருட்களை வாங்கவே செலவிடப்படுகிறது. நுகர்வுச் சந்தை-அதுவும் ஆடம்பர நுகர்வுச் சந்தை வளர்வதன் மூலம் பணச் சுழற்சி ஏற்படாது. அதனால் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படாது. புதிய செல்வங்களும் உருவாகா. வேலை வாய்ப்புக்களும் பெருகி வளராது.

ஆதலால் வாழ்க்கைக்கு இன்றியமையாததல்லாத ஆடம்பரச் செலவுகளில் செலவு செய்வதை தடுத்து முதலீடாக மாற்றுவதற்கு ஏற்றாற்போல செலவு வரி விதிப்பதைப் பற்றி, சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இரவும் பகலும் சினிமா தியேட்டர்களின் இயக்கம். சினிமா தியேட்டர்களுக்கு வரிவிலக்குச் சலுகைகள். சினிமாக் கொட்டகைக்காரர்கள் விருப்பம் போலக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம். இவையெல்லாம் மனிதகுலத்தைப் பொருளாதார முயற்சிகளிலிருந்து விடுவிப்பவையாகும்.