பக்கம்:எச்சில் இரவு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


அவன் அப்போது சிரித்தான்.

அவள் அப்போது விரித்தாள்.

"பேரியாழுக்கு இருபத்தொன்று நரம்புகள்

மகரயாழுக்கு பத்தொன்பது நரம்புகள்

சகோடயாழுக்குப் பதினான்கு நரம்புகள்

செங்கோட்டியாழுக்கு ஏழு நரம்புகள்" என்று சொன்னாள் அவள்.

"ஆதி யாழுக்கோ ஆயிரம் நரம்புகள்" என்றான் அவள்.

"ஆதி யாழ் இப்போது நம்நாட்டில் இல்லையே" என்றாள் அவன்.

"ஆதி யாழ் இல்லாவிட்டால் என்ன, அருகில்தான் நீ இருக்கிறாயே!"

என்று சொல்லிக் கொண்டே அவள் உடம்பிலுள்ள பச்சை நரம்புகளையும், பருவக் குரும்பைகளையும் அவன் தடவினான்.

அவன் அங்கே

நின்றான்-இருந்தான்.

அவள் அங்கே

இருந்தாள்-கிடந்தாள்.

அந்த வாடகை வாலிபன்

அவள் மீது படிந்தான். அப்போது,

அங்கிருந்த வெளிச்சம் விலகிக் கொண்டது.

அந்த அறைக்குள் முன்பே நுழைந்த

நீண்ட சதுரமான இருட்டில்,

நான்கு கால் நாடகம் நடைபெற்றது.

அவளுக்கு அது-பழைய நாடகம், புதிய ஒத்திகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/66&oldid=1317864" இலிருந்து மீள்விக்கப்பட்டது