பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

உலக ஒளி


தின் ஒளியானார்! காந்தியாரின் புகழை, காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல- எல்லோரும் புகழ்கிறார்கள்; உலக மக்களெல்லாம் போற்றுகிறார்கள். அவ்விதம், பிறர் போற்றுவதுதான், ஒரு தலைவருக்குக் கிடைக்கும், தனி மரியாதையாகும்.

இதனை, காங்கிரஸ் நண்பர்கள் எண்ணியிருந்தால், என்னை உள்ளன்போடு வரவேற்றிருக்க வேண்டும். மாற்றுக் கட்சிக்காரனான நான், திறந்துவைப்பதைக் குறித்துப் பெருமை யடைந்திருக்கவேண்டும். 'அருளொழுகும் கண்ணைப்பார்! அழகு மேனியைப்பார்! ஒளிதவழும் முகத்தைப் பார்! உத்தமரைப்பார்'-என்று என்னை அழைத்துச் சொல்லி யிருக்கவேண்டும். இவ்விதம் செய்திருந்தால், தங்களுக்கும் கீர்த்தி தேடிக் கொண்டவர்களாவார்கள்: உத்தமருக்கும் கீர்த்தி தேடிக் கொடுத்தவர்களாவார்கள். அதை விட்டுவிட்டு எம்முடைய காந்தியாரைத் தீண்டவே கூடாது ! என்று சொல்வது, பொருத்தமில்லை--பொருளில்லை-கீர்த்தி இல்லை--சிறப்பு இல்லை.

உத்தமர் காந்தியார் வெறிகொண்ட ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்னும் செய்தியை 'ரேடியோ மூலமாகக் கேள்விப்பட்டேன்--பதறினேன். அப்போது என்னை வானொலி நிலையத்தார், அழைத்தார்கள். காந்திபடிகளைக் கொன்றவன் மராட்டிய பார்ப்பனான கோட்சே என்பவன். அதனால் மக்களின் ஆத்திரவெறி, அக்குலத்தார்மீது பாய்ந்து விடுமோ என்று அஞ்சிய காரணத்தால் என்னை அழைத்துப் பேசச் சொன்னார்கள்.

கயவனாயிருந்தால், கட்சி வெறி கொண்டவனாயிருந்தால், அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டில் விபரீதங்கள் பல ஏற்படுவதைக் கண்டிருக்க முடியும்.