இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சி. என். அண்ணாதுரை
113
ஏற்றுக் கொண்டார்கள்? இது போல, அவர் கூறிச் சென்ற பல வழிகளை, உங்களால், ஜீரணிக்க முடியவில்லை. ஆனால், மாற்றுக்கட்சியிலிருக்கும் நாங்கள் ஏற்று பணி செய்து வருகிறோம். அந்த நற்பணியின் பெயரால் மணிமண்டபம் கட்டி, உருவச் சிலையைத் திறந்து வைக்கும் இந்த நேரத்தில், உங்களை நான், கேட்டுக்கொள்வேன்--அவரது பெயரால்.
'அரசியல் நாகரீகத்தை வளர்க்கப் பாடு படுங்கள்.
ஜாதி பேதம் ஒழியப் போராடுங்கள், இல்லாமைக் கொடுமைகளை யொழிக்க ஒத்துழையுங்கள்.
மத நம்பிக்கையால் விளையும் கேடுகளை ஒழித்துக் கட்ட முன் வாருங்கள்!'
★
எ -- 8