பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

பொன் மொழிகள்


கருவிகளைக் காண்கிறாய் ;
கைக்கொண்டவன் ஆள்கிறான் !

அதோ, அடிக்கிறானே கம்பு; அது ஏது தெரியுமா ? நீ வெட்டித் தந்ததுதான் ! சுட்டுப் பொசுக்குகிறானே அந்தத் துப்பாக்கிகள்; அவை நீ அன்று செய்து தந்தவைதான் !

காதுகளை மூடிக்கொள்கிறாயே, உழைத்து ஓடான உத்தமனே ! என் பேச்சு உன் இதயத்தைச் சுட்டெரிக்கிறதா? பாவம் ! நீ, என்ன செய்வாய்? உனக்கு யாரும் இந்தக் காட்சிகளைக் காட்டவில்லை, இது நாள்வரை !

ஆகவேதான் இந்தக் காட்சிகளை கண்டதும் துடிக்கிறாய்! தொல்லை செய்வோரின் துடுக்கடக்குவேன் என்று உன் இதயம் துடிப்பது என் கண்ணுக்கு நன்றாகக் தெரிகிறது!

உத்தமனே, அவசரப்படாதே ! இன்னும் கொஞ்சம் கேள்! உன்மீது சவாரி செய்யும் பிரபுக்களின் ஆணவப் பிடரியை நீ ஆட்டவேண்டும் என்பதுதான் எனது ஆசை !

ஏன் இப்படி உனது கண்கள் சிவப்பேறுகின்றன? எனது வார்த்தைகள் உன் கோபாக்கினியை கிளறுகின்றனவா? மகிழ்ச்சி நண்பா, எனக்கு இரட்டை மகிழ்ச்சி ! உன் இதயத்தில் எரிமலை உதயமாக வேண்டும் என்பது தானப்பா என் ஆசை ! அது ஏற்பட்டுவிட்டதென்றால் என் லட்சியம் நிறைவேறும்; நிம்மதி பெறுவேன், கிளி கூண்டை விட்டுப் புறப்பட்டுவிட்டது ! காளை கட்டவிழ்த் துக்கொண்டது ! வீரன் விலங்கை முறித்துக் கிளம்பி விட்டான் என்று எக்காளம் முழக்குவேன் ! அதில்தான் நண்பா, உன் வாழ்வே இருக்கிறது !

"சரி. என்னை நான் புரிந்துகொண்டேன். இப்போது என்ன செய்வது நான்? என்னை வேதனையிலாழ்த்தியவனை