பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

நல்ல தீர்ப்பு

பொன் மொழிகள்


நார்வே நாட்டிலே முதலாளிகள் இருக்கிறார்களா? இல்லை, கிரீஸில் முதலாளிகள் உள்ளனரா? ஸ்வீடனில் முதலாளிகள் உள்ளனரா? ஸ்விட்ஜர்லாந்தில் முதலாளிகளைப் பார்க்க முடியுமா? ஸ்பெயினில் முதலாளிகள் வாழ்கிறார்களா? பாரீஸில் பார்க்க முடியுமா முதலாளிகளை? அமெரிக்காவில் முதலாளியிருக்கிறான் அடுத்தபடி இந்தியாவில் வளர்கிறான். நான் குறிப்பிட்ட சிறிய நாடுகளில் முதலாளிகள் ஏன் இல்லை தெரியுமா? அந்த நாடு இந்தியாவைப்போல் மிகப் பெரியதல்ல. அந்த நாட்டிலிருக்கும் வியாபாரி ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோடுகளுக்கு இடை யேதான் வியாபாரம் செய்யவேண்டும் எனவே அவன் பெரிய முதலாளியாவதில்லை.

தேசியமயமாக்கு

டாட்டாக்களும் பிர்லாக்களும், பஜாஜிகளும், டால் மியாக்களும் இந்த பெருத்த லாபந்தரும் தொழிற்சாலைகளை நடத்துவதினாலேயேதான் உண்டாகின்றனர். முதலாளித்வம் இந்த முறையினாலே உண்டாகிறது. தொழிலாளர் துயரம் வளருவதற்கு இதுவே காரணம். எனவே பெருத்த லாபந் தரக்கூடியதும், பெரிய தொகையான முதலும், பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வைப் பொறுத்தும் இருக்கும், இந்த மூலாதாரமான தொழில்களை தனிப் பட்டவர்களின் உரிமைகளாக விட்டால் அதன் மூலம் முதலாளித்வம் வளர்ந்து பொருளாதார பேதம் மிகுந்து போகும் நிலை வரக்கூடுமாகையால் இவைகளை சர்க்காரே நடத்துவது சாலச் சிறந்ததாகும். இவை மூலம் கிடைக்கக் கூடிய லாபம் நாட்டு மக்களுக்கே வந்து சேரும்! வாழ்க்கைத் தரம் உயரும்.